தேர்தல் ஆணையருக்கு எதிராக திமுக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு படி உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை

புதுடெல்லி:

 

தமிழகத்தில் பல்வேறு சட்ட சிக்கல்களைக் கடந்து உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு பணிகள் தொடங்கின. 



 

அதன்பின்னர் இடஒதுக்கீடு முறையாக அமல்படுத்தப்படாததால் தேர்தல் ஆணைய அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தேர்தலை நடத்தவேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. அதன்பின்னர் தேர்தல் பணி விறுவிறுப்படைந்தது.






 


வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிவடையும் நிலையில், திமுக சார்பில்  உச்ச நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

 

இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

 

தமிழக உள்ளாட்சித் தேர்தல் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை முழுமையாக செயல்படுத்தவில்லை. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு படி உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு படி இடஒதுக்கீடு மற்றும் வார்டு மறுவரையறை செய்யப்படவில்லை. 

 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது


Popular posts
நில தரகர்களுக்கும் அமைப்பு சாரா தொழில் முறையில் நிவாரண உதவி வழங்க வேண்டும் - முதல்வருக்கு விருகை வி.என்.கண்ணன் கோரிக்கை
Image
கொரனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு முகாமினை சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் தொடங்கி வைத்தார்.
Image
இராணுவ வீரர்களுக்கு சமமானவர்கள் மருத்துவர்கள் - டாக்டர் அன்புமணி ராமதாஸ்
Image
கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களை அடையாளம் காட்டும்படி வீடியோ வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் - அரசுக்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் வேண்டுகோள்
Image
தூத்துக்குடி மாவட்ட அனைத்து அரசு பணியாளர்களுக்கிடையேயான தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்
Image